Posted: Fri Nov 16, 2012 2:18 pm Post subject: MSV - Playing with tones and semitones - Part 2
பாக்யலக்ஷ்மி படத்தில் வரும் மற்றொரு பாடல் 'காதல் எனும் வடிவம் கண்டேன்'. இங்கும் மயக்கம் வருகிறது. ஆனால் இது இன்ப மயக்கம். நாயகி தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி பாடும் பாடல்.
காதல் எனும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலை இடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை தன்னில்.
இந்த பாடல் அமைந்த ராகம் அமீர் கல்யாணி என்று சொல்வார்கள். பின்னணி இடையோடு பார்த்தால் அந்த செயல் வருவதை மறுக்க முடியாது. ஆனால் சாகித்யங்களின் இசையை கூர்ந்து கவனித்தால் அதில் சங்கரபரனத்தின் ஸ்வரங்கள் தான் வருவதை உணர முடியும். மேலும் அந்த ரகாத்தை போல் அல்லாமல் அந்த ராகத்தின் ஸ்வரங்களை தனி தனியாக பிரித்து இசை அமைத்ததை உணர முடியும்.
அப்படிப்பட்ட சங்கராபரனத்தில் கல்யாணி ராகத்தில் வரும் பிரதி மத்யம ஸ்வரம் சேருகிறது.
அதுவும் எந்த இடத்தல் சேருகிறது என்று பார்த்தால் 'மயங்குகிறேன் ஆசை தன்னில்' என்ற இடத்தில சேருகிறது. அதுவும் எப்படி சேருகிறது என்று பார்த்தால் அந்த பிரதி மத்யம ஸ்வரம், பஞ்சம ஸ்வரத்திற்கு பின் சேருகிறது. பஞ்சம ஸ்வரத்திற்கு பிரதி மத்யம ஸ்வரம் 1/2 ஸ்ருதி குறைந்தது.
மயக்கத்தில் ஒரு தளர்ச்சி ஏற்படுவதை இசை எப்படி உணர்த்துகிறது என்பது புரியும்.
மேலும் சரணத்திலும் அதே இசை வரும் போது வரும் வரிகளையும் கவனிக்கவும்
தொட்டவுடன் மேனியெல்லாம்
துவண்டு விடும் கொடியை போலே
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum