Posted: Tue Dec 29, 2009 7:11 am Post subject: reproduction of lyrics
மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல்களின் வரிகளை அலசும் இத்திரியில் என்னுடைய தாழ்மையான கருத்து ஒன்றினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக இசையமைப்பாளரின் முழுத்திறமையும் பாடல் வரிகளில் தென்படுவது மெல்லிசை மன்னரின் படைப்புகளில் தான் தலையாயதாகத் தோன்றுகிறது. அப்படிப் பாடல் வரிகளைப் பற்றி நாம் ஆய்ந்து எழுதும் போது தவிர்க்க இயலாத காரணங்களால் சில பாடல்களின் வரிகளை நாம் இங்கு பொதுவில் அலச இயலாது. இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் ஒரு புறம் என்றாலும் சில பாடல்கள் காட்சிகளுக்கேற்பவும் வணிக நோக்கிலும் சிறிது பாதை விலகி வேறு திசையில் பயணிக்கும். அவை தணிக்கைக் குழுவினரால் மாற்றம் செய்யப் படவோ அல்லது நீக்கவோ நேரிட்டிருக்கலாம். அதற்கு இசையமைப்பாளரை நாம் குறை சொல்ல முடியாது. பாடலின் இசையின் சிறப்பை நாம் அனுபவிப்பது வேறு, அதன் வரிகளையும் அதன் உள்ளடக்கிய பொருளையும் ஆய்வது வேறு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எண்ணற்ற பாடல்களை மெல்லிசை மன்னர் உட்பட தமிழ்த் திரையுலகில் அனைத்து இசையமைப்பாளர்களும் தந்துள்ளனர். எனவே நமக்கு மிகவும் பிடித்த பாடல் என வரும் போது சில சமயம் அப்பாடலின் வரிகளை பொதுவில் அலச முடியாது.
மேற்கண்ட காரணங்களினால் நாம் இவ்வலையின் ஒருங்கிணைப்பாளரான திரு ராம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்க விழைகிறேன்.
நாம் நம்முடைய பாடல் வரிகளை அலசி இவ்வலைப்பூவில் பதியும் முன் தாங்கள் அதனைப் படித்து விட்டு அதன் பிறகு இங்கு இடம் பெறச் செய்யும் வகையில் ஏற்பாடு செய்தால் நலமாயிருக்கும் என எண்ணுகிறேன்.
இது முழுக்க முழுக்க என் சொந்தக் கருத்து. இது நிச்சயம் மாற்றுக் கருத்துக்கு இடம் உண்டு என்பதையும் நான் அறிவேன்.
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum