 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Mon Mar 23, 2009 10:14 am Post subject: A Handful of Piano Picks (23)-Avan Ninaithaanaa |
|
|
A Handful of Piano Picks - Part 23
மெல்லிசை மன்னர் இசையில் பியானோ பாடல்களின் மூலம் ஒரு உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். பயணம் முடியவில்லை, முடியவும் முடியாது எனும் எண்ணத்தால் பெருமகிழ்ச்சியே!
ஒரு சில ராகங்கள் மெல்லிசை மன்னரின் கைகளால் மேன்மை அடைந்துள்ளது. ஒரு படி மேலே சென்று மோட்சம் அடைந்துள்ளது என்றாலும் மிகையில்லை. 'இந்த ராகத்தில் அமைக்க வேண்டும்' என்று வரிந்துகட்டிக் கொண்டு மெல்லிசை மன்னர் இசைப்பதில்லை என்கிற சிறு விளக்கத்தையும் இங்கு கூறவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு ராகம் மிகச் சிறப்பான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மெல்லிசை மன்னரிடம் முழுவதுமாக தன்னையே அற்பணித்துக் கொண்டதன் விளைவே, மெல்லிசை மன்னர் அந்த ராகத்தில் பாடல் அமைக்கும் நிகழ்வு!
பெயரிட்ட, பல பெயரிடப்படாத ராகங்களுடன் கடும் போட்டியிட்டு மெல்லிசை மன்னரை அடைந்த காரணத்தினால் ஒரு ராகம் குதூகலம் அடைகிறது. அந்த குதூகலத்துடன் அவர் கைகளில் விழுந்து எழுவதால்தான் மெல்லிசை மன்னரின் பாடல்களில் ஒரு துளி இனிமை கூடுதலாகவே இருக்கிறது!
அந்த வகையில் பல வெற்றி வாகைகளைச் சூடிய காரணத்தினால் சிரத்தில் செருக்கேறி அலைகிறது 'பாகேஸ்வரி' ராகம். கவித்துவத்தின் காரணத்தினால் பாரதியின் செருக்கினை நாம் ஏற்றதைப் போல், வெளிப்பட்ட இசைத்துவத்தின் காரணத்தால் 'பாகேஸ்வரியின்' செருக்கையும் நாம் ஏற்றாக வேண்டியுள்ளது.
சரி, அப்படி செருக்கு தலைக்கேற என்னதான் காரணம் என்று பார்த்தால், தலையசைத்து நாமே அதை ஒப்புக்கொள்ள வேண்டியவாறு பாடல்கள் உள்ளன. ஷெனாய்- செண்டை கொண்டு வருடும் 'நிலவே என்னிடம் நெருங்காதே', ஆர்கஸ்ட்ரேஷனால் மனதை அமைதிப்படுத்தும் 'மலருக்குத் தென்றல் பகையானால்', குழலால் தாலாட்டைப் பொழியும் 'இப்படியோர் தாலாட்டு பாடவா' போன்ற பாடல்களில் துவங்கி பல பாடல்கள் பட்டியலில் உள்ளன. நம் தளத்தில் இதைக் குறிப்பிட்டும் இருக்கிறோம். பியானோவிலும் இந்த ராகத்தைச் சிறக்க வைக்க முடியுமென்று முதன் முதலாக உலகிற்கு உணர்த்திய பாடல் 'அவன் நினைத்தானா இது நடக்குமென்று'.
பாடலின் முன்னிசை டி.எம்.எஸ் அவர்களின் கம்பீர மென்மையில். மெல்லிசை மன்னருக்கு டி.எம்.எஸ் அவர்களின் குரலின் மீது ஏன் ஒரு கண்மூடித்தனமான காதல் இருந்தது என்பதற்கு இப்பாடலின் முன்னிசையே போதுமானது... குரலில் அப்படி ஒரு இழைவு!
பியானோ அழகாக பாடலின் ஓட்டத்தை எடுத்துக் கொள்ள, ஸ்ட்ரிங்ஸ் பின்னணியில் உடன் தொடுத்துக் கொள்ள சறுக்கு மரத்தில் விளையாடுவது போல் சறுக்கிக்கொண்டு பல்லவியில் வந்து விழும்.
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று
பல சங்கதிகளை உள்வாங்கிக் கொண்டு அதே வரி...
ஒரு பியானோ பிட், முடிந்து மீண்டும் அதே வரி... அடுத்து:
நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று
இப்பாடலின் பல்லவியில் மொத்தம் இரண்டே வரிகள் என்கிற உண்மையை இப்பாடலைப் பற்றி எழுதத் தொடங்கியவுடன் தான் நான் அறிந்தேன். அவ்விரண்டு வரிகட்குமேல் இவ்வளவு அலங்காரம் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இவர் ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பாடிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! "அட...இவர் இவ்வளவு நேரம் பாடியது ஒரே வார்த்தையைத்தான்" என்று கேட்பவர்கள் வியந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
நல்ல ஆற்றங்கரை தனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
நல்ல காவல் கொண்டாய் நீ கை கொடுத்தாய்
அவன் காத்திருந்தான் இன்னும் கனியுமென்று
உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம் இசை இருக்க
நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான் உன்னைக் கலங்க வைக்க
ஒவ்வொரு இடையிசையிலும் பியானோ பொங்கி வழிவதை இனிதே உணரலாம். காத்திருந்து பாய்வது போல் பளிச்செனத் துவங்கும் பியானோ. உடன் கிட்டார் ரிதம் சேர்க்கை கொள்ளை அழகு. சரணங்களின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து இசைக்கப்பட்டதாகும்.
மெலடிக்கு ஆதிக்க நாயகனாக சாதிக்க வந்தவர் மெல்லிசை மன்னர் என்பதை அனைவரும் அடங்கி ஏற்றுக் கொள்வதே முறையாகும்!
இப்பாடல் கம்போசிங்கின் போது, இப்படியோர் இனிமையைக் கேட்ட இயக்குனரும் தயாரிப்பாளரும் தங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டிருப்பார்கள்: "நான் நினைத்தேனா இது நடக்குமென்று, நினைக்குமுன்னே பாடல் பழுக்குமென்று."
தொடப்பட்ட ராகம், பாடலின் காலப்பெருமாணம், வரிகளுணர்த்தும் 'பாவம்', பாடலுக்குள் தேங்கி இருக்கும் ஏக்கம், இவ்வனைத்திற்கும் ஒளியேற்றும் விதமாக பாடலில் பொதிந்து கிடக்கும் இனிமை - அனைத்தும் மெல்லிசை மன்னரின் இசைச் சாம்ராஜியத்தின் மணி மகுடங்கள்!
ஒரு சில சமயம் நான் நினைப்பதுண்டு. நாம் அவர் பாடலைப் பற்றி இவ்வளவு எழுதுகிறோம். முதலில் எழுத்தகுதியுண்டா? இல்லை. அப்படி எழுதினாலும் அது பாடலின் சிறப்பைக் கால் சதவிகிதம் கூட அது உணர்த்தப் போவதும் இல்லை. இருப்பினும் அவர் பாடலின் சிறப்புதான் நம்மை எழுத்தூண்டுகிறது என்று அவர் மேலே பழியைப் போட்டு விட்டு தொடர்வதால் தான் தொடர்ந்து எழுத முடிகிறது.
ஆதியந்தமிலாதது உலகம் என்றுரைப்பது மெய்ஞானம்
அதையே கணித மூலம் வரையறுக்க முயல்வது விஞ்ஞானம்
இவ்விரண்டு கொண்டும் துளியும் அறிய இயலாதது உன்ஞானம்
அந்தமிலா இசையளித்த மெல்லிசை மன்னா - இது நன்கறிந்தும் உன்
இசையெழிலை எழுத்தினால் மொழிய விழைகிறேன், என் அஞ்ஞானம்!
(பயணம் தொடரும்...)
A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV _________________ Ramkumar
Last edited by Ram on Wed Jun 17, 2009 4:29 pm; edited 1 time in total |
|
Back to top |
|
 |
msvramki Fanatic
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Tue Mar 24, 2009 11:22 am Post subject: |
|
|
HATS OFF RAM !
மொழியழகும், கருத்தழகும் பொங்கி வழிகின்றன உன் எழுத்தழகில் !!
வாழ்க வளமுடன், மெல்லிசைமன்னரின் இசைப்பரிமாணங்கள் போல் !
அப்பா. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
 |
parthavi Philiac

Joined: 15 Jan 2007 Posts: 704 Location: Chennai
|
Posted: Tue Mar 24, 2009 10:06 pm Post subject: |
|
|
அன்புள்ள ராம்,
இசை ஊற்றுக்குத் தமிழருவியால் திருமஞசனம் செய்திருக்கிறீர்கள். உஙகள் இசைப்புலமை, தமிழ்ப்புலமை இரண்டுமே பிரமிப்பூட்டுகின்றன.
'மனமார்ந்தபாராட்டுக்கள்' என்ற சாதாரண வார்த்தைகளைத் தவிர வேறேதும் சொல்லத்தோன்றவில்லை.
மெல்லிசை மன்னரின் பெருமைகளைப் பதிவு செய்யும் இந்த அமைப்புக்குப் பொறுப்பளராக நீங்கள் அமைந்திருப்பது மிகவும் பொருத்தம்.
உங்கள் சிறப்பான பணி தொடரவும், வளரவும் என் நல் வாழ்த்துக்கள். _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
 |
N Y MURALI Maniac
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Wed Mar 25, 2009 6:10 pm Post subject: |
|
|
anbulla ram avargale,
avan ninaithaanaa idhu nadakkum endru enbadhu yenakku theriyaadhu. aanaal naan ninathen ungal posting arumaiyaaga irukkum endru. appadiye irundhadhu. tamizhil padhil solla aasai. mudiyavillai. romba yekkamaga irukkiradhu.
anbudan
na yoo murali |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|