"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

PARAMASIVAN KAZUTHILIRUNDHU PAAMBU KETTADHU ( SURYAKANTHI )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Mar 09, 2008 6:02 pm    Post subject: PARAMASIVAN KAZUTHILIRUNDHU PAAMBU KETTADHU ( SURYAKANTHI ) Reply with quote

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால்
எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொன்ஜம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உன்னைபோலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது
அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதார் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது


இந்த பாடல் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அமைந்த சூரியகாந்தி
என்ற படத்தில் வந்தது…1973இல் வெளிவந்த கறுப்பு வெள்ளை படம்….

நடுத்தர வர்கத்தை சேர்ந்த முத்துராமனும் ஜெயலலிதாவும் காதலித்து மணம் புரிந்த இளம் தம்பதியர்.ஒய்வு பெற்ற பின்னரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் தன் மாமனார் மேஜர் சுந்தர்ராஜனை
பார்த்து ஜெ வருந்தி தானும் வேலைக்கு சென்று துணை செய்வதாக முத்துவிடம் அனுமதி பெற்றுவேலைக்கு செல்ல அதில் படிப்படியாக அவர் முன்னேற ஒரு கட்டத்தில் முத்துவை விட அதிக
உத்தியோக உயர்வும் பெற்று , அதிக சம்பளமும் பெறும் நிலைக்கு உயர குடும்பத்தில் பிரச்னை உருவாகிறது…. சிறு வயதிலிருந்தே ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்ட முத்துவிற்கு இது மாபெரும் தன்மான பிரச்சனை போன்ற ஒரு மாயையில் சிக்கி …ஒருமித்த கணவன் - மனைவியிடையே பெரும் வாக்குவாதமும் , மன வருத்தமும் , பிரிவும் ஏற்பட இருவரும் பேசக்கூட விரும்பாத ஒரு
சூழ்நிலை ஏற்பட இது ஜேவை மிகவும் வாட்டுகிறது…
முத்துவின் தங்கை திருமணத்திற்காக அவர் பிள்ளை வீட்டார் கேட்கும் வரத்ட்சணைகாக ஜே வேலை செய்கிறார்… திருமணம் முன்பே அவர் தன் காதலனிடம் முறை தவறி விட்டதையும் ஜெ கேள்விபட அவர் அதை முத்துவிடமிருந்து மறைக்க வேண்டிய ஒரு கட்டாயம்….முத்து தன் தங்கையை உதறி தள்ளி விடுவாரோ என்ற அச்சம் காரணமாக எல்லா சுமையயும் பொறுப்பையும் ஜெ தாங்கிக்கொள்ள இதை அறியாத முத்து அவரை மிகவும் வெறுக்க ……நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது…. குடும்பத்தில் ஏற்படும் எந்த பொருளாதார வளர்ச்சியும் தன்முயற்ச்சியால் தான் ஏற்பட வேண்டும் என்று எண்ணும் முத்து

ஒரு புறம் தன் காதல் மனைவி உத்தியோகத்தில் தன்னை விட அதிகமான இடத்தில் இருக்கிறார் என்ற தாழ்வுணர்ச்சி

தன்னைவிட அதிகம் சம்பளம் பெறுகிறாரே என்ற பொறாமை…

வீட்டில் அனைவரும் ஜெவை பாராட்ட தன் பேச்சை யாரும் கேட்காமல் போக வருத்தம்…

தன் தங்கையின் திருமணத்திற்கு கூட யாரும் தன்னை கேட்கவில்லையே என்ற குழப்பம்….

வேலையை விடு என்று முத்து சொல்லியும் விடமுடியாத ஒரு கட்டாயம் ஜெவிற்கு

கணவன் - மனைவி உறவு முற்றிலும் முறிந்துவிடும் ஒரு கட்டத்தில் முத்துவின் தங்கை இருவரையும் ஒரு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்று அனுப்புகிறார் ( இருவருக்கும் இது தெரியாது ). நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது அதிர்ச்சி அடையும் தருவாயில் இந்த பாடலை அமைத்திருப்பார் திரு ஸ்ரீனிவாசன்…

படம் பார்க்கும் நமக்கோ ஒரு இன்ப அதிற்சி !! கவிஞர் கண்ணதாசனே நிகழ்ச்சியில் பாடுவார் மிக உற்சாகத்துடன் !!!

மூன்று சரணங்களைக்கொண்ட இந்த பாட்டின் வரிகளை மிக மிக அருமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் எழுதியிருப்பார் கவிஞர்
படத்தில் பாடலானது சூழ்நிலைக்கேர்ப மிக பொருத்தமானதாக அமைந்திருக்கும்….. வரிகள் ஒவ்வொன்றும் முள்ளின் மேல்
தைப்பது போல இருவரும் உணர்வர்…. அற்புதமான நடிப்பு …..ஜெ மிக அழகாக நடித்திருப்பார் இந்த படத்தில்….முத்துவிற்கு இது போன்ற கதாபாத்திரங்கள் அத்துபடி… செவ்வனே செய்த்திருப்பார் அவர்….ஒரு நல்ல குணசித்திர நடிகர் ….

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்ஜம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்


எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் தன் வாழ்க்கையில் மிக உயர்ந்த பதவியினை அடைந்தார் ….ஆனால் திடீரென்று ஏற்பட்ட ஒரு
சோதனை....அதற்கு மேல் அவரால் வாழ்க்கையில் முன்னேர முடியவில்லை…அதுவரை அவர் மூலமாக பல பதவி உயர்வுகளையும்
நன்மைகளையும் அடைந்த பல நண்பர்கள், வேண்டப்பட்டவர்கள் கூட பின் யாரும் அவர் பக்கமே போகவில்லை…..நல்ல தகுதியும்….அரும்பாடு பட்டும் அடைந்த ஒரு வளர்ச்சி அவருடையது….

இது என் வாழ்க்கையில் கண்ட உண்மை….நான் ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் என்னை இந்த பாடலை பாடச்சொல்வார்
இன்றும் சொல்கிறார் அவர் !! அந்த அளவிற்கு மேல்கண்ட வரிகளை அவர் ரசிக்கிறார்… இந்த பாடல் மட்டுமா ? உடனே அவர்
என்னை …மயக்கமா…கலக்கமா என்ற பாடலையும் உடனே பாடச்சொல்வார் !!!

வயலினும், புல்லாங்குழலும் , தனக்கே உரித்தான பாஙகூஸ் பிண்ணனியிசையுடன் ஒரு உற்சாகத்துடன் தான் துவக்குவார் நம்
மெல்லிசை மன்னர் …… அற்புதமான மெட்டமைத்த மன்னர் அத்துடன் விட்டாரா ? இடையிசையில் டிரம்பெட் அதிகமாக ஒலிக்கும்…
சரணத்திற்கு போகும்போது பாங்கூஸிடமிருந்து விடைபெற்று தபேலா பக்கம் செல்வது என்பது மெல்லிசை மன்னரின் கையெழுத்து
என்றே சொல்லலாம் !!! தீடீரென்ற ஷெனாய் சப்தமும், கிடாரிசையும் வியப்பில் ஆழ்த்தும் !!

முதல் இரண்டு சரணங்களின் முன்பான இசை மென்மையாக இருந்தாலும் திடீரென்று வயலின் ஓங்கி ஒலிக்கும்…உடனே ட்ரம்பெட்
அதை உள்வாங்கிக்கொண்டு மூன்றாவது சரணத்திற்கு நம்மை எடுத்துச்செல்லும்…. இந்த பிண்ணனியிசை பல அர்த்தங்களை சொல்லும் ஏன் என்றால் மூன்றாவது சரணத்தில் கவிஞர் தன் கைவண்ணத்தை காட்டியிருப்பார். அதற்கு பதில் தான் மன்னரின் இந்த இசைஅமைப்பு

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதார் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது


முத்து-ஜெ கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட சிக்கலை இதைவிட வேறு வரிகளால் நாம் சிந்தித்துகூட பார்க்க இயலாது !!
அற்புதமான வரிகள் இவை… நிலவை வைத்தே இரு பொருள்பட எழுதிய கவிஞர் காலத்தை வென்றவர் !!

பல இசைகருவிகளை கொண்டு ஒரு வாத்திய கச்சேரிக்கே கொண்டு சென்ற நன் மன்னர் மீண்டும் ஒருமுறை பாடலின் தன்மை
க்கேற்ப சந்தங்களையும் , பிண்ணனியிசையையும் அமைத்த அவரை எந்த வார்தைகளால் புகழ்வது !!??

டி.எம்.எஸ்…..இந்த மூன்று எழுத்து கொண்ட மனிதரை போல் உணர்ச்சியோடு பாடுபவரை நான் இந்த நாள்வரை காணவில்லை
பாடலின் முதல் பாதியை ஒருவித ஏளனத்தோடு பாடுவது போலவும்… கடைசி சரணத்தின்போது மிக உறுகி பாதிக்கப்பட்ட
ஒரு கணவன்-மனைவியின் மனவருத்ததினை மிக அழகாக பாடிக்காட்டிய டி.எம்.எஸ். போன்ற பாடகர் நமக்கு இனி கிடைப்பாரா ???

இதை போன்ற அர்த்தமுள்ள பாடல்களை இனி நாம் கேட்போமா ?? கேள்விக்குறி தானோ ??

முக்தா ஸ்ரீனிவாசன்- எம்.எஸ்.வி. அணி 70களில் பல வெற்றி படங்களை தந்துள்ளது…. இந்த கூட்டு 80களில் கூட தொடர்ந்தது…..
கீழ்வானம் சிவக்கும், பொல்லாதவன் , சிம்லா ச்பெஷல் போன்ற படங்களை தந்த இவர் போன்ற வெகு சிலர் தான்
எம்.எஸ்.வியை 80களில் பயன்படுத்தினர்…… இவர் எம்.எஸ்.வி. அபிமானி என்றே சொல்லலாம்….

எம்.எஸ்.வி. என்றால் எப்பொழுதும் எம்.ஜி.யார் அல்லது சிவாஜி படங்களுக்கு இசை அமைத்து பெயர் பெற்றவர் என்ற ஒரு கருத்து
உலாவுகிறது இந்த காலத்தினரிடம்…. அது எவ்வளவு தவறானது !!!!
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Mar 10, 2008 12:49 am    Post subject: Reply with quote

கணவன் மனைவி உறவை பற்றிய ஆழமான கருத்து கொண்ட அற்புதமான பாடலை தேர்வு செய்து இருக்கிறீர்கள் பாலாஜி. இந்த பாடல் காட்சியில் கண்ணதாசன் அவர்களே மேடையில் பாடுவது போல அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.

இந்த பாடலை பற்றி மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள். டி.எம்.எஸ். அவர்களை தவிர இந்த பாடலை வேறு யாராலும் இவ்வளவு அற்புதமாக பாடி இருக்கவே முடியாது. மெல்லிசை மன்னர் இந்த பாடலுக்கு மெட்டு அமைத்திருக்கும் விதம் இந்த பாடல் வரிகளுக்கு மேலும் மெருகூட்டி நம் மனதில் என்றும் நிலைத்திருக்க செய்து விட்டது.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Mar 23, 2008 10:42 am    Post subject: Re: PARAMASIVAN KAZUTHILIRUNDHU PAAMBU KETTADHU ( SURYAKANTH Reply with quote

S.Balaji wrote:
எம்.எஸ்.வி. என்றால் எப்பொழுதும் எம்.ஜி.யார் அல்லது சிவாஜி படங்களுக்கு இசை அமைத்து பெயர் பெற்றவர் என்ற ஒரு கருத்து உலாவுகிறது இந்த காலத்தினரிடம்…. அது எவ்வளவு தவறானது !!!!


இந்த காலத்தினரிடம் மட்டுமல்ல....பல 'அந்த' காலத்தினருக்கும் இந்த கருத்துண்டு.... இக்கருத்து கொண்ட அனைவருக்கும் உங்களின் இந்த உரை ஒரு நெத்தியடி!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group