|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
VaidyMSV & Sriram Lax
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Fri Feb 27, 2015 8:14 pm Post subject: SATHIYARAJ IN KUMUDAM DT 2/3/15 |
|
|
2-3-15 தேதியிட்ட குமுதம் பத்திரிக்கையில் நடிகர் சத்தியராஜ் , இசை படத்தில் அவருடய வில்லன் கதாபாத்திரம் பற்றியும் மற்றும் அந்த கதாபாத்திரம் இளையராஜாவை குறிபார்த்து உருவாக்கியது பற்றி தனது கருத்துககளை தெரிவித்து உள்ளார்.
இளையராஜா மேல் தனக்குள்ள அபிமானம் அன்பை பற்றி சொன்ன அவர் இந்த படம் இந்த காலத்தில் வந்ததால் இளையராஜா -ARR உடன் தொடாபு படுத்துகிறார்கள் என்றும் iஇப்படம் 70 களில் வந்திருந்தால் KVM MSV பற்றியது போல் தெரிந்திருக்கும் என்ற மேலான கருத்துக்கள் தெரிவித்துள்ளார் ,அவர்களைப்பற்றி உண்மை தெரியாமல் .
அவர்களின் குணா நலன்களை பற்றி தெரியாமலா அதே தொழிலில் 25 வருடமாக இருந்துகொண்டிருக்கிறார் . நான் ராஜா ரெஹ்மான் சர்ச்சைக்குள் போகவில்லை .ஆனாலும் "எல்லாம் தெரிந்த நடிகர்கள்" ஒன்றும் தெரியாமல் ஒரு வெகு ஜன வாரப்பத்திரிக்கையில் சொல்லியிருப்பதால் உண்மை நிலையை எழுத வேண்டிய கட்டாயம்
இதோ KVM குணநலன்
* தனது இசையில் கோரஸ் பாடவந்தவர் திறனை முன் கூட்டியே உணர்ந்து சென்னைக்கு சென்று ம்யூஸிக் அஸிஸ்டென்ட் ஆகி முன்னுக்கு வா என்று ஆசிர்வதித்து பணம் மற்றும் புது சட்டை கொடுத்து MSV க்குஆசிர்வாதம் பண்ணி அனுப்பியவர்
*கூண்டு கிளி படத்திற்க்கு போட்ட தனது பாடலை கேட்டதற்க்கு மகிழ்வுடன் கொடுத்து இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றே போடுங்கள் என்று ராமன்ணாவிடம் சொல்லி அனுப்பியவர் படம் குலேபகவலி பாடல் மயக்கும் மாலை பொழுதே
* கௌரவம் படத்தின் இசை அமைக்கும் வாய்ப்பு தனக்கு வந்த போதும் ,கதை கேட்டு இது விசுவிற்கான ஸப்ஜெக்ட் என்று மருதளித்தவர்
இனி MSV
** வேட்டைகாரன் படத்திற்கு தனக்கு இசை அமைக்கும் சந்தர்ப்பம் வந்தும் மாமா வேலை செய்யும் கம்பனியில் நான் இசை அமைக்க விரும்பவில்லை என்று எம் ஜீ ஆர் இடமே மறுத்தவர்
** KVM மேல் மட்டற்ற பாசம் உள்ளவர் இன்றும் அவர் தனக்கு உதவியதை மறக்காமல் கூறுபவர்
** MSV யின் பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என்று அவரிடம் கேட்டபோது என் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் ,மற்றபடி மற்ற சம்பிரதாயங்கள் வேண்டாம் என்றவர் ,கொடுத்த முன்ோர்கள் லிஸ்ட் இல் KVM மும் அடங்குவார் .
அந்த அளவிற்க்கு உயரிய மரியாதை மாமா KVM க்கு அளித்தவர் மெல்லிசை மன்னர்
அது போலவே - KB குமாரை விட்டு msv இசையமைக்க கேட்டபோது வீ குமாரை தொடர்பு கொண்டு KB இடம் தான் பேசுவதாகவும் தொடர்ந்து வீ குமாரே இசை அமைக்கவேண்டும் என்றதற்க்கு வீ குமார் நீங்கள் இசை அமைத்தால் எனக்கு மகிழ்ச்சியே என்ற பிறகே இசை அமைக்க தொடங்கினார் .
அதே போல் தான் AM ராஜா ஸ்ரீதர் பிரிவின் போதும்
அதே தான் உலகம் சுற்றும் வாலிபன் இசை அமைக்க வாய்ப்பு வந்த போது நடந்தது .
அப்படி பட்ட பண்பாளர் மெல்லிசை மன்னர் . இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிறைய கூற முடியும் இப்போது உள்ளவர்கள் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா ??
இப்படிப்பட்ட இருவர் எப்படி இசை போன்ற படத்திற்க்கு கருவாக முடியும்
மெல்லிசை மன்னர் kvm பற்றி சொல்லும் போது மஹான் என்பார் அது அவருக்கும் சாலப் பொருந்தும்
மெல்லிசை மன்னர் - திரை இசை திலகம் போல் திறமையிலும் மற்றவர் பேணும் தன்மையிலும் இனிமேல் ஒருவர் பிறக்கத்தான் வேண்டும்.
குமுதம் போன்ற பத்திரிகைகள், பிரமுகர்கள் தவறாக கூறும்போது தவறுகளை சுட்டிகாட்டும் அளவிற்க்கு உள்ளவர்களை ஆசிரியர் குழுவில் வைத்திருப்பது பத்திரிகை தர்மத்திற்க்கு நல்லது .
நன்றி _________________ vijayakrishnan |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|