|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Meenakshi
Joined: 23 Dec 2007 Posts: 119 Location: United States Of America
|
Posted: Thu Jul 12, 2012 7:12 am Post subject: Lyrics - Mayangum vayadhu madimel vizhundhu - Kanavan |
|
|
படம்: கணவன் - 1968- ல் வெளிவந்த படம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ். சுசீலா
பாடலாசிரியர்: வாலி
இசை: மெல்லிசை மன்னர்
சுசீலா:
மயங்கும் வயது, மடி மேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து, வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து, வழங்கும் விருந்து
டி.எம்.எஸ்:
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல எனை அணைத்திருக்க
சுசீலா:
மூவகை தேன்கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைபூ கன்னத்தில் முத்தம் பதிக்க
டி.எம்.எஸ்:
முதலில் தயக்கம், முடிவில் மயக்கம்,
இடையில் நெருக்கம், இருந்தால் இனிக்கும்.
மயங்கும் வயது, மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து, விருந்து.
சுசீலா:
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழ சாறினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவையிருக்கும்
டி.எம்.எஸ்:
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
அம்மம்மா எனென்ன நடந்திருக்கும்
சுசீலா:
நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும், தொடர்ந்தால் வளரும்
டி.எம்.எஸ்:
இதுதான் உறவு நெடுநாள் கனவு
சுசீலா:
இனிமேல் வரவு, இளமை செலவு
இதுதான் உறவு, இதுதான் உறவு, உறவு, உறவு.
நண்பர் ஒருவர் கொடுத்த எம்.ஜி.ஆர். படப்பாடல் சீடீ. சில மாதங்களாக கேட்க மறந்து போய் அப்படியே இருந்தது. போன வாரம் தற்செயலாக கேட்டுக்கொண்டே வந்த போது இந்த பாடலும் செவி வழி தேனாய் பாய்ந்தது. இதை எப்படி இவ்வளவு நாள் கேட்காமல் இருந்தேன் என்று மிகவும் நொந்து போய் தொடர்ந்து மூன்று நாட்களாக திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆஹா, என்ன ஒரு மெட்டு இது! அற்புதம்! அற்புதம்! ஐம்புலன்களையும்
கட்டி போட்டு இசை தியானம் செய்தேன் என்றே சொல்லலாம். :)) அத்தனை அழகான பாடல் இது.
பல்லவியில் 'மயங்கும் வயது' என்ற வரிகள் முடிந்தவுடன் ஒரு நொடிக்குள் ஒரு வயலின் படையே இசை போர் தொடுத்து கொண்டு நம் செவியின் வழியாக இறங்கி மனதை வென்று விடுகிறது. அப்படி ஒரு வேகம். பாடல் முழுதும் வயலின் இசை தரும் சுகம் இதம்.
முதல் நான்கு வரி முடிந்தவுடன் மீண்டும் மூன்றாவது வரியான 'இதழ்கள் மலர்ந்து' என்ற வரி முதல் வரியின் மெட்டில் வருவதுதான் என்ன ஒரு அழகு. அதிசயித்து போனேன். நம் மெல்லிசை மன்னரால் மட்டுமே செய்ய முடிகிற அதிசயம் இது.
'ஆடையில் மூடிய' என்று டி.எம்.எஸ். பாடலில் நுழைகிறபோதே 'வாவென ஜாடையில் என்னை வரவழைக்க' என்று கிரங்கும் குரலில் பாடி இந்த பாடலுக்குள்ளேயே நம்மையும் அழைத்து சென்று விடுகிறார்.
பல்லவியை மீண்டும் பாடாமல் அப்படியே அதன் போக்கில் பாடலை முடித்திருக்கும் விதம் இந்த பாடலுக்கு ஒரு தனி ஸ்டைல், அழகு.
இந்த பாடலின் காட்சி அமைப்பும் மிகவும் பிரமாதம். சுசீலா பாடுவதாக வரும் 'மாமர தோப்பினில்' என்று வரும் இரண்டாவது சரணத்தில் 'மீறிய போதையில்' என்ற வரிகளில் ஜெயலலிதா அவர்களின் முகபாவம் மிகவும் ரசிக்க வைக்கும். இரவின் மடியில், இயற்கை சுழலில் இந்த காதல் பாடலை கேட்கும்போது தேன் குடத்திலேயே முழ்கி திளைக்கும் ஒரு வண்டின் நிலைதான் நமக்கும்.
இந்த பாடலின் காட்சிக்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். என்னிடம் உள்ள இந்த பாடலின் சீ.டீ-யில் ஜெயலலிதா அவர்கள் எம்.ஜீ.ஆரிடம் பேசும் இரண்டு வரி வரும். 'நான் இதுவரை பேசினது ஒண்ணுமே உங்களுக்கு புரியலையா' என்று கேட்பார். அதற்கு எம்.ஜீ.ஆர். ம்ம்ஹ்ம்..என்றவுடன் ஜெயலலிதா 'ம்ம்ம்..ஒரே மயக்கமா இருக்கு' என்பார். உடனே இந்த பாடல் தொடங்கும். நானும் இந்த உரையாடலுடன் இந்த முழு பாடலை இணைக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
பாடல் காட்சிக்கான இணைப்பு:
http://www.oruwebsite.com/music_videos/kanavan/mayangum-vayathu-video_173affbe7.html |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|